Search This Blog

Sunday, August 28, 2011

உடற்பயிற்சியின் அவசியம்

The need of exercise explained by the contemporary legend Vethathiri Maharishi...

Vethathiri Maharishi Simplified Exercises

Vethathiri maharishi simplified exercises. continue doing it you will definitely feel joy! You click for next parts on completion of this part

Tuesday, August 23, 2011

பயிரிடும் பரப்பளவு கடந்த ஆண்டை விட அதிகரிப்பு




புதுடில்லி: நாடு முழுவதும் பருவமழை பரவலாக பெய்து வருவதால், நெல்,பருத்தி உள்ளிட்ட பயிர்களை பயிரிடும் பரப்பளவு அதிகரித்து வருகிறது. இதனால், நடப்பு பயிர் பருவத்தில், உணவு தானியங்களின் விளைச்சல் சிறப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.தேசிய வானிலை ஆய்வு மையம், அதன் முன்கூட்டிய மதிப்பீட்டில், ஆகஸ்ட் - செப்டம்பர் மாதங்களில், நாட்டில் பருவமழை பொழிவு, வழக்கத்தை விட குறைவாகவே இருக்கும் என்று தெரிவித்திருந்தது. மேலும், ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை, ஒட்டுமொத்த அளவில் பருவமழை பொழிவில் சராசரியாக 4 சதவீதம் பற்றாக்குறை உண்டாகும் என்று மதிப்பிட்டிருந்தது.இந்நிலையில், கடந்த சில வாரங்களாக நாட்டில் பரவலாக நல்ல அளவில் மழை பொழிந்து வருகிறது. குறிப்பாக, பஞ்சாப், ஹரியானா, மேற்குஉத்தரபிரதேசம் ஆகிய வட மேற்கு மாநிலங்களில் வழக்கத்தை விட 74 சதவீதம்கூடுதலான மழை பொழிவு பதிவாகியுள்ளதாக, தேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், நெல், கோதுமை, கரும்பு உள்ளிட்ட முக்கிய உணவுப் பயிர்கள் பயிரிடும் பரப்பளவு அதிகரித்துள்ளது.சென்ற வெள்ளிக்கிழமை வரையிலுமாக, நாட்டின் மழை பொழிவு, வழக்கத்தை விட 26 சதவீதம் அதிகமாக இருந்ததாக, இம்மையத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், நெல்,மக்காச்சோளம் உள்ளிட்டவற்றை அதிக அளவில் பயிரிட்டு வரும் கிழக்கு பிராந்தியத்திலும், கடந்த வாரம், வழக்கத்தை விட 36 சதவீதம் அதிக மழை பொழிந்துள்ளது.
வரும் வாரங்களிலும், பருவ மழை சிறப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால், நாடு முழுவதும் உணவு தானியங்கள் பயிரிடும் பரப்பளவு அதிகரித்து வருகிறது.பருவமழை வழக்கத்தை விட குறைவாக இருக்கும் என்ற முந்தைய கணிப்பின் அடிப்படையில், விதைப்பு பணிகளில் ஆர்வம் காட்டாமல் இருந்து வந்த விவசாயிகள், தற்போது ”று”றுப்பாக வேளாண் பணிகளில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர்.இதனால் வரும் வாரங்களில், நாட்டின் உணவு தானியங்கள் பயிரிடும் பரப்பளவு கணிசமாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.மத்திய வேளாண் அமைச்சகத்தின் அண்மை கால மதிப்பீட்டின்படி, பருப்பு வகைகள் தவிர, இதர உணவு தானியங்கள் பயிரிடும் பரப்பளவு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த மதிப்பீட்டின்படி, சென்ற 19ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், நாட்டின் நெல் பயிரிடும் பரப்பளவு 3.22 கோடி எக்டேராக உள்ளது. இது, சென்ற ஆண்டு இதே காலத்தை விட 8.36 சதவீதம் (2.99 கோடி எக்டேர்) அதிகமாகும்.எண்ணெய் வித்துக்கள் பயிரிடும் பரப்பளவு 2.63 சதவீதம் அதிகரித்து, 1.65 கோடி எக்டேரில் இருந்து 1.69 கோடி எக்டேராக உயர்ந்துள்ளது. நிலக்கடலையின் பங்களிப்பு குறைந்ததால், எண்ணெய் வித்துக்கள் பயிரிடும் பரப்பளவு மிகக் குறைந்த அளவிற்கே உயர்ந்துள்ளதாக வேளாண் அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர். மதிப்பீட்டு காலத்தில், நிலக்கடலை பயிரிடும் பரப்பளவு 40.60 லட்சம் எக்டேராக இருந்தது. இது, கடந்த ஆண்டு இதே காலத்தில் 49 லட்சம் எக்டேராக இருந்தது.அதேசமயம், கரும்பு பயிரிடும் பரப்பளவு 4.76 சதவீதம் அதிகரித்து 49.3 0 லட்சம் எக்டேரில் இருந்து 51 லட்சம் எக்டேராக உயர்ந்துள்ளது. பருத்தி பயிரிடும் பரப்பளவும் 9.37 சதவீதம் உயர்ந்து 1.06 கோடி எக்டேரில் இருந்து 1.17 கோடி எக்டேராக அதிகரித்துள்ளது.
நாடு முழுவதும், கரும்பு மற்றும் பருத்தி பயிரிடும் பரப்பளவு கடந்த ஆண்டை விட அதிகரித்துள்ளது. எனினும் பருப்பு மற்றும் கம்பு,சோளம் போன்ற பயிர்களின் பரப்பளவு குறைந்துள்ளது. பருப்பு வகைகள் பயிரிடும் பரப்பளவு 11.03 சதவீதம் குறைந்து 1.16 கோடி எக்டேரில் இருந்து, 99 லட்சம் எக்டேராக சரிந்துள்ளது.

நடப்பாண்டு நெல் சாகுபடி பரப்பு 4.20 -4.30 கோடி எக்டேராக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.கடந்த 2008-09ம் ஆண்டு இந்தியாவின் நெல் உற்பத்தி, 10 கோடி டன் என்ற சாதனை அளவைஎட்டியது. வறட்சி காரணமாக, அடுத்து வந்த ஆண்டுகளில் நெல் உற்பத்தி குறைந்திருந்தது. 2009 - 10ம் ஆண்டு நாட்டின் நெல் உற்பத்தி 8.90 கோடி டன்னாகவும், 2010-11ம் ஆண்டு 9.40 கோடி டன் என்ற அளவிலும் இருந்தது.சென்ற நிதியாண்டில், நாட்டின் வேளாண் உற்பத்தி, மதிப்பீடுகளை விஞ்சி 6.6 சதவீதம் அதிகரித்து, 23.59 கோடி டன் என்ற சாதனை அளவை எட்டியது என்பது குறிப்பிடத்தக்கது.அணைகள் நிரம்புகின்றன: கடந்த வார நிலவரப்படி, பருவ மழை பொழிவு பரவலான அளவில் உள்ளதால், நாட்டில் உள்ள 81 முக்கிய அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்த அணைகளில், கடந்த ஆண்டு, இதே காலத்தில் காணப்பட்டதை விட 137 சதவீதம் அதிகமாக நீர் இருப்பு உள்ளது. காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் நல்ல அளவில் மழை பெய்து வருவதால், உபரி நீர் வரத்தால் தமிழக அணைகளிலும் நீர் வரத்து அதிகரித்து வருகிறது.தமிழ்நாட்டில், இவ்வாண்டு வேளாண் உற்பத்தி அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

Monday, August 22, 2011

சர்க்கரை நோயை வெல்லும் மூலிகை 'மூர்த்திகள்'!

இந்தியாவில் பெரும்பாலோனோர் சர்க்கரை நோய் என்னும் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏராளமான மூலிகைகள் சர்க்கரை நோய்க்கு மருந்தாக உள்ளன. நம் கண் முன்னே கிடைக்கும் மூலிகைகளின் பலன்களை தெரிந்து கொள்ளலாம்.

பொன்குறண்டி

பொன் குறண்டி என வழங்கப்படும் மூலிகை சமீபகாலமாக சர்க்கரை நோய்க்கான ஆய்வுகளில் பெரிதும் ஈடுபடுத்தப்படுகிறது. அமெரிக்காவில் ஓஹியோ பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஆய்வுகளில் இம் மூலிகை ரத்த சர்க்கரை அளவை 29 சதவீதம் குறைப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இது நாம் உண்ணும் உணவு குளுகோஸாக மாறும் வேகத்தைக் குறைப்பதாகவும் அதனால் நோயளிகளுக்கு இன்சுலின் தேவை குறைவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. சித்த மருத்துவத்தில் சர்க்கரை நோய் மற்றும் அதன் பிற அறிகுறிகளான உடல்வலி, தசைவலி ஆகியவற்றுக்காக "கடலழிஞ்சில்" நீண்ட காலமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

ஆவாரை

ஆவாரையின் இலை, பூ, பட்டை, வேர் என ஐந்து உறுப்புகளுமே நீரிழிவில் பயன்படுகின்றன. அதிக அளவில், அடிக்கடி சிறுநீர் போவதைக் குறைப்பதால், காவிரி நீரையும், கடல் நீரையும் வற்றச் செய்யும் எனச் சிறப்பிக்கப்பட்டுள்ளது. நவீன ஆய்வுகளில் ஆவாரை சர்க்கரை, அளவைக் கட்டுப்படுத்துவது மட்டுமன்றி, ரத்தத்தில் கொலஸ்டிரால் அளவைக் குறைப்பதால் இதயத்தை பாதுகாப்பதாகவும், ஹீமோ குளோபின் அளவு, தரம் ஆகியவற்றை அதிகரிப்பதாகவும் நிரூபித்துள்ளனர்.

சிறுகுறிஞ்சான்

"சர்க்கரைக் கொல்லி"யாகிய சிறுகுறிஞ்சான் கணையத்துக்கு மறுவாழ்வு அளிக்கிறது. ஆம் - இது கணையத்தில் இன்சுலின் சுரப்பிக்கும் பீட்டா செல்களைப் புதுப்பித்து அவற்றின் எண்ணிக்கையை இரு மடங்காக்குவதாக தற்பொழுது நிரூபிக்கப்பட்டுள்ளது. அதனால் இயற்கையாகவே இன்சுலின் சுரப்பு அதிகமாவதாலும், குடலில் சர்க்கரை உறிஞ்சப்படும் வேகத்தைக் குறைப்பதாலும் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்துகிறது. மேலும் ரத்தத்தில் கொலஸ்டிரால், டிரைகிளிசரைடு ஆகியவற்றின் அளவைக் குறைப்பது மட்டுமன்றி, நல்ல கொழுப்பான H.D.L. ன் அளவை அதிகரிக்கவும் செய்கிறது. மாரடைப்புக்குக் காரணமாகும் ரத்தக் குழாய் கொழுப்புப் படிவைத் தடுக்கிறது.

சீந்தில்

நலவாழ்வை நீட்டிக்கும் காய கற்ப மூலிகை, ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவது மட்டுமன்றி நோயெதிர்ப்பு சக்திக்குக் காரணமான "இம்யூனோகுளோபுலின் - ஜி" - ன் அளவை, அதிகப்படுத்துகிறது. கொலஸ்டிராலைக் குறைக்கிறது. சர்க்கரை நோயினால் ஏற்படும் உடல் எடைக் குறைவைத் தடுக்கிறது.

பாகல்

பாகல் இலை, காய், விதைகளில் "தாவர இன்சுலின்" என்ற புரதச் சத்து உள்ளது. சோதனைகளில், இது இன்சலின் போல் செயல்படுவதாகவும், இன்சுலின் சார்ந்த மற்றும் இன்சுலின் சாராத இருவகை நோயர்களுக்கும் பயன்படுவதாகவும், கணையத்தில் செயல்பட்டு பீட்டா செல்களை உயிர்ப்பிப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. ரத்தத்தில் சர்க்கரை அளவை 50% வரை குறைக்கிறது. சர்க்கரை விழித்திரை நோயைத் தடுக்கிறது. நரம்புகளின் பாதிப்பையும் சரி செய்கிறது. சர்க்கரையிலிருந்து கொழுப்பு உண்டாவதை அதிகரிப்பதாகவும், கொழுப்பில் இருந்து சர்க்கரை உருவாகி ரத்தத்தில் கலப்பதைக் குறைப்பதாகவும் தெரிகிறது.

வெந்தயம்

இதில் காணப்படும் "ட்ரைகோனெல்லின்" அதிகரித்த ரத்த சர்க்கரை அளவைக் குறைப்பதோடு, கொலஸ்டிராலையும் 25% அளவு குறைக்கிறது. எனவே மாரடைப்பு ஏற்படாமல் காக்கிறது. குடலில் சர்க்கரை ஊறிஞ்சப்படும் வேகத்தைக் குறைக்கிறது.

வில்வம்

சிவனுக்குரிய மூலிகையாகக் கருதப்படும் வில்வம் அனைத்து நோய்களையும் தடுக்கும் மாமருந்தாக நம் நாட்டில் பயன்படுத்தப்படுகிறது. வில்வ இலையிலிருந்து கிடைக்கும் பாஸ்பேட் சர்க்கரை நோயைக் குறைப்பதோடு, நோயர்களின் திசுக்களுக்கு அதிக பிராணவாயு கிடைக்கச் செய்வதன் மூலம் சோர்வடையாமல் காக்கிறது. சர்க்கரை நோயின் காரணமாக ஏற்படும் இதய ரத்தக் குழாய் அடைப்பைத் தடுப்பதாக சோதனை முடிவுகள் தெரிவிக்கின்றன.

நாவல்

நாவலின் பட்டை, பழம், விதை ஆகிய மூன்றும் பாரம்பரியமாக சித்த மருத்துவத்தில் நீரிழிவுக்குப் பயன்படுத்தப்படுகின்றன. குறிப்பாக நாவல் விதை மற்றும் விதையின் மேல்தோல் ஆகியவை இன்சுலின் அளவை அதிகரிப்பதை நவீன ஆய்வுகள் உறுதி செய்துள்ளன. மேலும் சர்க்கரை நோயில் உண்டாகும் சிறுநீரக, கல்லீரல் மாற்றங்களை நாவல் விதை சரி செய்கிறது.

மஞ்சள்

தன்னிடம் இல்லாத மருத்துவக் குணமே இல்லை என்னும் அளவுக்கு, எண்ணற்ற சோதனைகள் மூலம் நோய் தடுப்பாற்றலை அதிகரிப்பதாகவும், கிருமி நாசினியாகவும், உடல் தேற்றியாகவும், ஜலதோஷம், காய்ச்சல் முதல் புற்று நோய் வரை அனைத்து நோய்களிலும் பயனளிப்பதாக நிரூபணம் செய்யப்பட்டுள்ள மஞ்சள் நீரிழிவு நோயையும் கட்டுப்படுத்துகிறது. குறிப்பாக நெல்லிவற்றலுடன் சேர்ந்து வழங்கும்போது சர்க்கரை நோயில் அதிக பலன் அளிப்பதுடன், நீண்ட கால பின் விளைவுகளைத் தடுத்து சிறுநீரக செயலிழப்பு, அதிக ரத்தக் கொழுப்பு ஆகியவற்றையும் தடுக்கிறது.

மேலும் வேம்பு, வேங்கை, கொன்றை, மருது, கறிவேப்பிலை, கடுகு ரோகிணி ஆகிய மூலிகைகளும் சர்க்கரை நோயில் பலன் அளிப்பதை தற்கால ஆய்வுகள் உறுதி செய்கின்றன. மூலிகை மருந்துகள், உணவுச் சீரமைப்பு, தக்க உடற்பயிற்சி, ஆகிய மும்மூர்த்திகள் உதவியுடன் சர்க்கரைநோயை வெல்ல நிச்சயம் முடியும்

Busting popular food myths


Myth: Cutting carbohydrates from yourdiet will make you lose weight 
Most health fanatics are cardophobic. To clear the confusion: highly refined carbohydrate sources like white bread, sugar, refined white flour and white rice is what we should stay away from (the simple carbohydrates). However, we all need the carbohydrates out of whole grain namely brown rice, nachni, millet, jowar and bajra (complex carbohydrates). The body needs glucose as the main source of fuel for energy. And complex carbs provides exactly that. These give us sustained sugars (good for our brains) and keep the insulin levels in check.

If you are worried about your weight loss, remember that healthy is not just about the race to being size zero. By cutting carbs completely, you cut off the fuel supply. Your aim should be healthy bodies first; thin will follow. Besides, you wouldn't want problems like constipation, bad breath and bingeing on sugars, would you? That's exactly what happens when you stay off carbs completely.

Myth: It's ok to have Honey, Jaggery, Maltitol, Xylitol instead of sugar 
Sugar is just not just the white crystals you consume, but is also present in white bread, pasta, cereals, processed foods, sauces. These are your simple sugars often mentioned on packages that get camouflaged: maple syrup, high corn fructose syrup, honey, sucrose, molasses, cane juice. Even the chocolate bars that claim to be sugarless have maltitol, xylitol and erythritol which are used to replace sugar only because they have fewer calories. Nevertheless, they are all derivatives of sugar and cause the same problems as sugar. The natural sugars from fruits is the only alternative for sugar at present in the Indian markets.

Myth: Our prime source of calcium is dairy foods 
It's a huge misconception that our prime calciumrich food is milk. Milk is full of saturated fats and cholesterol, which clog your arteries. Caesin, the basic molecule in milk, stresses the liver, pancreas, stomach and intestines. Commercial dairy cows are pumped with hormones and to counter udder infection they are given antibiotics, which in turn affect the villi in your intestines. So even though milk is loaded with calcium, it does not help us in any way. The alternative to dairy to get your dose of calcium? Cutting back animal foods and choose a plant-based approach. Have dark leafy greens, broccoli, beans, nuts, seeds, tofu. All these sources give us useable calcium, which nourishes us.

Myth: Cutting back all oil (liquid fat) reduces weight 
We need liquid fat (which we get from liquid oils) and the monosaturated fat (olive oil, avocados, canola, almond, peanut oils) for normal bodily functioning. We don't need saturated fats (margarine, hydrogenated oils). The most crucial one is the polysaturated fat (flax seeds, sesame, sunflower, soy, walnut, safflower - rich in omega 3, 6 and 9). We also need essential fatty acids (EFA's) because the body does not make these and you need to supplement your diet with them. Low fat or fat free diets will cause us to be hungry (depleting the omegas) which in turn will cause us to binge. Healthy liquid fat consumption actually promotes weight loss.

(Shonaalii Sabherwal is a macrobiotic food counsellor ) 

Sunday, August 21, 2011

What is financial crisis...

This video simplifies global financial crisis. So the complexities on understanding financial crisis is eased. It may be old video few of you might have watched once. But please watch it again ..

Wednesday, August 10, 2011

Take tea without milk for weight loss



Scientists have discovered that tea contains high levels of compounds that help reduce the amount of fat but proteins found in cows' milk neutralise this fat-fighting ability.

New research has shown that the compounds, called theaflavins and thearubigins, prevent obesity when given to rats that were also on a high-fat diet.

Researchers now believe this could explain why people in Britain appear not to benefit from the healthy affects of tea despite being among the world's biggest consumers of the beverage, theTelegraph reports.

Devajit Borthakur, a scientist at the Tea Research Association at Jorhat in the Indian state of Assam, said: "When tea is taken with milk, theaflavins and thearubigins form complexes with the milk protein, which causes them to precipitate."

"It means that we don't get the health benefit from these compounds nor from milk protein. Therefore, it is always advised to take tea without milk."

A study by scientists in Japan, reveals that extracts from tea leaves inhibit the absorption of fat in the guts of rats being fed high-fat diet.

These rats also had less fat tissue on their bodies and lower fat content in their livers, reports theJournal of Nutrition. 

Hiroaki Yajima, a scientist with the Kirin Beverage Company in Japan who carried out the Japanese research, said: "Black tea extracts may prevent diet-induced obesity by inhibiting intestinal lipid absorption.
"

Tuesday, August 02, 2011

நல்ல டாக்டர்கள் `இருவர்'


1

நலவாழ்வு வாழ நீங்கள் நாட வேண்டிய `இயற்கை' மருத்துவர்கள், இரண்டு பேர். இவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் உடல் நலனைக் கட்டிக்காப்பதில் கைதேர்ந்த `நிபுணர்கள்'. அவர்கள் யாரென்று அடையாளம் தெரிய இதோ அவர்கள் முகவரி...
காலையில் எழுந்ததும் இவரிடம் உடலைக் காட்டுவதுதான், நமது உடலை `செக்கப்' செய்து கொள்ளும் செலவில்லாத வழி. அவர் உடனே பல வியாதிகருக்கு தடுப்பு மருந்தை உடலில் செலுத்தி விடுவார். காசு எதுவும் கேட்க மாட்டார். அந்த டாக்டர் வேறு யாருமல்ல `சூரிய'பகவான்தான்.
`சூரிய ஒளி புகாத வீட்டில் டாக்டர் நுழைவார்' என்பது பழமொழி. சூரிய ஒளி உடலுக்கு என்னென்ன நலன்களைத் தருகிறது தெரியுமா?
* சருமத்திற்கு பொலிவு தருகிறது. உடலில் நோய் எதிர்ப்பு பணியைச் செய்யும் ரத்த வெள்ளையணுக்கள் அதிகம் உற்பத்தியாக உதவுகிறது. இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
* சூரிய ஒளி, உணவு செரிமானத் தன்மையை அதிகரிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. கழிவுகளை வெளியேற்ற உதவும், வளர்ச்சிதை மாற்றத்திற்கும் துணை புரியும்.
* உடல் ஊட்டச்சத்தில் முக்கிய பங்கு வகிக்கும் `வைட்டமின் டி` கிடைக்கச் செய்கிறது. சமீபத்திய ஆய்வில், மாலை இளம் வெயிலில் நடைபயணம் செய்வது ஆண்மை வீரியம் கிடைக்க உதவுவதாக கண்டறியப்பட்டிருக்கிறது.
* காலை மாலை இளம் வெயிலின் மூலம் உடலில் சூரிய ஒளி படுவதால் புற ஊதாக் கதிர்கள் உடலில்படும். அது வைரஸ், பாக்டீரியா, ஒட்டுண்ணி போன்ற கிருமிகளைக் கொல்லும் தன்மை கொண்டது. உச்சி வெயிலில் கிடைக்கும் அதிகமான புற ஊதாக்கதிர் உடலுக்கு தீங்கு விளைவிக்கும்.
* சூரிய ஒளி படாமல் வாழ்பவர்களுக்கு புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம்.
* நலத்துடன் வாழ விரும்புபவர்கள் காலை, மாலை வெயிலில் சிறிது நேரம் (குறைந்தது 10 நிமிடங்கள்) உலவும் படியான பணிகளைச் செய்தாலே போதும். இந்த நன்மைகளெல்லாம் உங்களுக்கு கிடைத்துவிடும்.
2
கசப்பில்லா மருந்து தருவது இவரின் வாடிக்கை. எனவே அனைவரும் மகிழ்ச்சியுடனே இவர் தரும் மருந்தை சாப்பிடுவார்கள். நோயில்லாத நேரங்களிலும் எல்லாரும் இந்த மருந்தைச் சாப்பிடுகிறார்கள். மற்ற மருந்துகள் ஒரு நாளைக்கு ஒரு டோஸ், 3 டோஸ் என்றால் இந்த மருந்தை தினமும் 8 முதல் 10 டோஸ் (டம்ளர்) சாப்பிடலாம். அத்தனை சர்வசஞ்சீகை மூலிகை அது.
புரியவில்லையா... தண்ணீர்தாங்க அந்த மருத்துவர்.
இயற்கை தந்த அற்புத மூலிகை இது. உடல் அதிகப்படியாய் இருப்பது தண்ணீர்தான். உடலில் ஒவ்வொரு செல்லும் பாதிக்குமேல் தண்ணீரைக் கொண்டிருக்கிறது. தண்ணீர் உடலை எவ்வாறெல்லாம் வளப்படுத்துகிறது தெரியுமா?
* சோடியம், பொட்டாசியம், குளோரைடு, பைகார்பனேட் அடங்கிய எலக்ட்ரோலைட் என்னும் மூலக்கூறு உடல் இயக்கத்துக்கு அவசியமானது. போதிய தண்ணீர் கிடைத்தால்தான் உணவுகளில் இருந்து எலக்ட்ரோலைட் கிடைக்க ஏதுவாகும். இல்லாவிட்டால் செல்கள் வறண்டுவிடும் அல்லது மாண்டுபோகும்.
* உடல் தளதளவென்று அழகு பெற தண்ணீர் அவசியம். உடலில் கொலஸ்டிரால் (கெட்ட கொழுப்பு) அதிகமாகாமல் தடுக்கும்.
* தினமும் சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு 2 கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும்.
* தண்ணீர் வாதநோய் ஏற்படுவதை தடுக்கும். இதயம், மூளைக்குச் செல்லும் தமனிகள் தடையின்றி செயல்பட உதவும்.
* மூளை 85 சதவீதம் தண்ணீரால் ஆனது. தண்ணீர் பருகுவதற்கேற்ப மூளை புத்துணர்ச்சி பெறும். இதனால் நீங்கள் உற்சாகமாக செயல்படுவீர்கள். நினைவுத்திறன் அதிகரிக்கும். ஞாபகமறதி வியாதிகள் ஏற்படாமல் தடுக்கும்.
* தினமும் குறைந்தது 8 டம்ளர் (2 லிட்டர்) நீர் பருகுவது ஆரோக்கியத்திற்கு அவசியம். உங்களின் தாகத்தில்தான் உடல் ஆரோக்கியத்தின் தாக்கம் இருக்கிறது என்கிறார் புளோரிடா மருத்துவ நிபுணர் பத்மாங்கலிட்ஜ்.
Related Posts Plugin for WordPress, Blogger...